Thursday, January 20, 2011

காவலன் = வேதாளர்

இனிய காமிக்ஸ் ரசிகர்களே,
                 "கண்ணா! லட்டு தின்ன ஆசையா? " - இந்த வசனம் எதையாவது நினைவு படுத்து கிறதா? சென்ற பதிவு உலகத்தரம் ஆனது என்ற இல்லுமிக்கும், இலக்கியதரமானது என்ற திரு.ரபிக்கிற்கும் , இந்த பதிவை காண [சைட் அடிக்க] கண் கோடி வேண்டும் என்ற காதலருக்கும், லக்கிகும், மற்றும் இந்த பதிவை +2  விலங்கியலில் சேர்க்க வேண்டும் என்ற நண்பருக்கும் நன்றிகள் பல......

[   சிங்! யாருமே இல்லாத கடைக்கு யாருக்குடா   டீ  ஆத்துற? ]

                                                                                              

           "வேதாளனின் சொர்க்கம் " என்று , இக்கதை முத்துவில், [no .84 ] வெளிவந்தது. வேதாளனின் சொர்க்கம் = ஈடன் தீவு.  இத்தீவு சிங்கம்,புலி,மான்,ச்டேகோராஸ் , குகை பூதம் என அனைத்து விலங்குகளும் ஒற்றுமையாக வாழும் இடம்.

            திமிர் பிடித்த , பணக்கார வேட்டைக்காரன் மார்க், அவனது சகா, வழிகாட்டி ஈவான் மற்றும் ஒரு பைலட் ஆகிய நால்வர் குழு ஒரு விமானத்தில் வேட்டையாட காட்டுக்குள் நுழைகின்றனர். காட்டிலாகாவிடம்  அனுமதி பெறும் மார்க், குறிப்பிட்ட விலங்குகளை மட்டுமே வேட்டையாடுவதாக உறுதி அளிக்கிறான். பின் அந்நால்வர் குழு காட்டின் மேல் பறக்கிறது.

    
           விமானத்தில் இருந்து வரி குதிரைகளைக்  கண்ட மார்க் , விமானத்தை தரை இறக்குகிறான். விமான ஒலியினால் கலவரம் அடைந்த விலங்குகள் சிதறி ஓடுகின்றன, இதற்கிடையே,

            விண்ணை காப்பான் ஒருவன், இம்மண்ணை காப்பான் ......

             என்று பாட்டு பாடாமல் செல்லும் வேதாளர்,  விமான ஒலியினால் கவரப்படுகிறார். வேதாளர் தனது குதிரையில் விமானத்தை பின் தொடர்கிறார்.

            விலங்குகளை தவற விட்ட மார்க் குழு, " பிரன்ஹா"  மீன் நிறைத்த ஆற்றை கடக்கிறது. சிங்கம்,புலி, மான் என அனைத்து விலங்குகளும் ஒற்றுமையுடன் வாழும் "ஈடன் தீவு" அக்கயவனின் கண்ணில் படுகிறது. புதியவர்களை கண்டதும் , வேதாளரின் வளர்ப்புகள் வெகுண்டு ஓடலாயின....

             வேட்டைகாரர்களின் துப்பாகிகள் முழங்கியது. கலவரத்தில் ஒரு மான் குட்டி காயம் அடைகிறது. அடிபட்ட மானின் இரத்த வாடையால் ஈர்க்கப்பட்ட சிங்கமும்,புலியும்  வேதாளர் கற்பித்த உணவுப் பழக்கத்தை மறக்கிறது.  மானை நெருங்குகிறது. அதே நேரம் , துப்பாக்கி முழங்க , கயிற்றில் தொங்கியவாறு வேதாளர் ஆற்றை கடக்கிறார்.

சிங்கம் போல பறந்து வர்றான் செல்ல பேராண்டி....



              அத்து மீறிய வேட்டையர்களை பந்தாடுகிறார் வேதாளர். பின் வழி தவறிய மாமிச உண்ணிகளுக்கு பாடம் கற்பிக்கிறார்.





காவலன் த டெர்ரர்
அந்த கயவர் குழுவில் நல் மனம் கொண்ட பைலட் மட்டும் மன்னிக்க படுகிறான். ஈடன் தீவின் காவலன் தான் தான்  என்று வேதாளர் நிருபிக்கிறார்.          


               ஈடன் தீவில் மீண்டும் அமைதி நிலவுகிறது.

எங்கள் தீவில் எல்லா நாளும் கார்த்திகை.....

               இக்கதையின்  அடிப்படையில் வேதாளரின் பல சாகசங்கள் உள்ளன. ஈடன் தீவு, தங்க கடற்கரை,மண்டை ஓட்டு குகை பொக்கிஷங்கள் என கதை களங்கள் தான் மாறும்.3  அல்லது   4  நபர்கள் காட்டில் நுழைவர். அதில்  ஒருவன் நல்லவனாக இருப்பான். மற்றவரகள் அக்கிரமம் புரியும் போது , அவன் வேதாளரின் பெருமைகளை எடுத்து உரைப்பான்.........   இப்படி பல கதைகளில் ரிபீட் ஆனாலும், என்றும் அலுக்காத ஹீரோ நம் வேதாளர்.

                 சமீபத்தில், முதலை பட்டாளத்தில், "ஈடன் தீவு , கதையின் போக்கை நீர்த்துப் போக செய்வதால்,அதன் முக்கியத்துவத்தைக் குறைத்ததாக படித்தேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை வேதாளரின் கதை களங்களில், ஈடன் தீவு தான் டாப்......
             

பொதுவாக வேதாளரின் கதைகளில்  இரத்தம் தெரிக்காது; வன்முறை இருக்காது.ஆபாசம் இருக்காது. [அநேகமாக ராணி காமிக்ஸில் வெளியான "வன மோகினி" தான் அதிக பட்ச  கவர்ச்சியாக நான் நினைக்கிறன்.]
             
மண்டை ஓட்டு குகை , விசித்திர குள்ளர்கள், மரணமில்லா வாழ்வு, முத்திரை மோதிரங்கள் ,காட்டிலாகா, தங்க கடற்கரை, ஈடன் தீவு என என் சிறு வயதில் என் கற்பனை உலகினை பரவசப் படுத்தியவர் வேதாளர். வேதாளர் மட்டுமே....
       
      இப்பதிவு குறித்த உங்களின் மேலான கமெண்டு களை  எதிபார்க்கிறேன்..நன்றி. 
          
பின் குறிப்பு: சென்ற பதிவின் தொடக்கத்தில் கேட்ட கேள்வி எங்கள் அறிவுக்கு விருந்தாக இருந்தது என்ற சபரி -க்கு நன்றி.
.

Sunday, January 2, 2011

PHANTOM THE GREAT

காமிக்ஸ் நண்பரே,

                                தங்கம் கிடைத்ததா? இல்லை. நல்ல நட்பு தங்கத்தை விட சிறந்தது. இந்த வசனம் எந்த கதையில் வரும்?

காமிக்ஸ் உலகின்  "டான்", அனைவரும் அறிந்த உயர்திரு .வேதாள மாயாத்மா வின் "ஜூம்போ" கதை பற்றி ஒரு அலசல்.

                                இக்கதையில், வேதாளர் ஒரு நாள் காயமடைந்த குட்டி யானையை  பார்க்கிறார். அதன் கால் முறிவு காயத்திற்கு  சிகிச்சை அளிக்கிறார். முதலில் வேதாளரை கண்டு மிரளும் குட்டி யானை பின்னர் வேதாளரின்  இரக்க மனதை புரிந்து கொண்டு சிகிச்சைக்கு உடன்படுகிறது . அதற்கு ஜூம்போ என்று பெயர் இடுகிறார் .
                            
                                சிகிச்சை முடிந்தவுடன் ஜூம்போ வை  காட்டில் விடுகிறார்.நன்றியுடன் காட்டிற்குள் செல்கிறது அந்த யானை.

                               சில மாதங்களுக்கு பின்பு கொடுங்கோல் அரசனை எதிர்த்த வேதாளர் சிறைப்படுகிறார்.அந்த கொடுங்கோலன் வேதாளர்க்கு மரண  தண்டனை அளிக்கிறான்.அவன் யானையின் காலால் மிதிக்குமாறு உத்தரவிடுகிறான்.வேதாளர்  மரணத்தை எதிர் பார்த்து பீடத்தில் தலையை வைக்கிறார்.யானை வருகிறது.

 

                             













                                                   
மரணத்தை மிக அருகில் பார்த்த வேதாளர் ஆச்சரியம் அடைகிறார்.தலையை மிதிக்க வந்த அந்த யானை வேதாளர்   கண்களை உற்று பார்த்தது .வேதாளரும்  கண்டுகொண்டார்.

                              ஜூம்போ !!!!!! என ஆர்ப்பரிக்கிறார். ஜூம்போ வேதாளரை துதிக்கையால் தூக்கி தன் மேல் வைக்கிறது . வேதாளர்  ஜூம்போ உதவியுடன் கொடுங்கோலனை  சிறை பிடிக்கிறார்.


                  
                              இதை படிக்கும் போது ராம நாராயணன் படம் பார்த்தது போல் தோன்றினாலும் ,சிறு வயதில் என்னை மிகவும் பாதித்த கதை.

ஆரம்பத்தில் கேட்ட வசனம் அடுத்த பதிவாக... இந்த இடுகைக்கு உதவிய நல்லவருக்கு நன்றி  !